ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் முகாம் மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீச்சு

ஜம்மு காஷ்மீரின் சோபூர் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப் முகாம் மீது பர்தா அணிந்து மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சிசிடிவியில் பதிவான காட்சி வெளியாகியுள்ளது.

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உள்ள பகுதிக்கு வந்த அந்த நபர், தனது கைப்பையில் இருந்த பெட்ரோல் குண்டை வெளியே எடுத்து பற்ற வைத்து, முகாம் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.

தீ பற்றியதும் அருகில் இருந்தவர்கள் பாதுகாப்பு தேடி  ஓடுவதும், தீயை அணைக்க  சி.ஆர்.பி.எஃப்  வீரர்கள் சிலர் வாளியில் தண்ணீர் இறைத்து ஊற்றுவதும் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு பிறகு அப்பகுதியில் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய மர்ம நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.