திங்கள் முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளில் நேர்முக விசாரணை

கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளில் நேர்முக விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழலில் முதன்மையான வழக்குகளின் விசாரணை மட்டும் காணொலி முறையில் நடைபெற்று வந்தது. கொரோனா தொற்றுப் பரவல் குறைந்ததையடுத்து வாரத்தில் இருநாட்கள் நீதிமன்றத்தில் நேர்முக விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவல் விகிதம் கடுமையாகக் குறைந்துள்ளதால், வரும் திங்கட்கிழமை முதல் முழுவதும் நேர்முக விசாரணை நடைபெறும் எனத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.