பெண்களுக்கு பீரியட்ஸ் டைம்ல யூஸ் ஆகும்: இந்தப் பொடியை அவசியம் வீட்ல வச்சுக்கோங்க!

Tamil Health Update : இந்திய சமையல் அறையில் பயன்படுத்தப்படும் முக்கிய மசாலா பொருள் பெருங்காயம். உணவிற்கு சுவை தருவது மட்டுமல்லாமல் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளட்ங்கியுள்ளது. இது ஊட்டச்சத்துக்களின் சக்தியாகவும், வாயு மற்றும் வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளைக் தீர்க்கவும் அவசியமாக மருத்துவ பொருளாக பயன்படுகிறது..

ஆனால் இந்த பெருங்காயம் எப்படி தயாரிக்கப்படுகிறது, எங்கிருந்து வருகிறது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. இது குறித்து ஸ்ட்ரீட் புட் பிலாகர் ஜான் ஓ’கானல் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்கிலிருந்து முகலாயர்கள் முதன்முதலில் இந்தியாவிற்கு இதனை கொண்டுவந்ததாக கூறியுள்ளார்.

பெருஞ்சீரகம் தாவரத்தின் பெண் இனங்களின் தண்டுகளின் உலர்ந்த சாற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படும், பிசின் போன்ற பசை சேகரிக்கப்பட்டு ஒரு சுத்தியலின் உதவியுடன் நசுக்கப்படுகிறது, இதுதான் பெருங்காயம் ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஈரானில் இந்த மூலிகையின் இனம் எவ்வாறு காணப்படுகிறது என்பதை தனது வீடியோ பதிவில் காட்டினார்.

இது வறண்ட மற்றும் குளிர்ந்த பாலைவன நிலைகளில் மட்டுமே வளரும் தாவரமாகும். காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது, இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பெருங்காயம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்று மும்பை தி ரிசார்ட் நிறுவனத்தின் நிர்வாக சமையல்காரர் அமித் கோச்சரேக்கர் தெரிவித்தார்.

பெருங்காயம் இந்தியாவில், மிகவும் பிரபலமாக இருந்தாலும், சில ஐரோப்பிய நாடுகளும் அதன் மருத்துவ குணங்களுக்காக இதைப் பயன்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெருங்காயம் இறக்குமதி செய்யப்பட்டவுடன் (ஒவ்வொரு ஆண்டும் ரூ. 600 கோடி மதிப்புள்ள 1,200 டன் பெருங்காயம்), அவை தூளாக அரைக்கப்பட்டு, தொழிற்சாலை அமைப்புகளில் கோதுமையுடன் கலக்கப்பட்டு, அசுத்தங்கள் இல்லாமல் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெருங்காயத்தின் வகைகள்

பெருங்காயம் இரண்டு வகைகள் உள்ளன: பால் வெள்ளை பெருங்காயம், அல்லது ஹிங் காபூலி சஃபைட்; மற்றும் சிவப்பு பெருங்காயம், அல்லது ஹிங் லால், என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.. இவை “இரண்டும் சமையல் ஊறுகாய்கள் மற்றும் சாஸ்களின் சுவையாகப் பயன்படுத்தப்படுகின்றன,” மேலும் பெருங்காயம் “மிக உயர்ந்த மதிப்புள்ள மசாலாவாக” கருதப்படுகிறது.

ஒரு சுவையூட்டும் பொருளாக, அதன் அதிகமான வாசனைக்காக அறியப்படும் பெருங்காயம், சமைக்கும் போது, ​​அதன் சுவை மற்றும் மணம் மிகவும் சுவையாக இருக்கும். சமையல் இயக்குநரும் இணை உரிமையாளருமான கப்பா சக்க காந்தாரி (பெங்களூரு மற்றும் சென்னை) indianexpress.com இடம் செஃப் ரெஜி மேத்யூ கூறுகையில்,

இந்த மூலப்பொருளின் நறுமணம் சூடுபடுத்தும் போது ஒரு அற்புதமான சுவையாக மாறும் மற்றும் தென்னிந்திய உணவு வகைகளில் இது ஒரு சமையல் அதிசயம். “மசாலா “கேரள சைவ சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்

நன்மைகள்

பெருங்காயத்தில், கார்மினேடிவ், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு,  மற்றும் டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் இருந்து மாதவிடாய் வலியைப் போக்குவது வரை, பெருங்காயம் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. சிறுநீரக கற்கள் முதல் மூச்சுக்குழாய் அழற்சி வரை பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதில் இது பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது. பெருங்காயம் இரைப்பை குடல் நோய்களைத் தடுப்பதாக அறியப்படுகிறது என்று மும்பை பாட்டியா மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் தன்வி எஸ். கூறியுள்ளார்.

மாதவிடாய் வலி அல்லது அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்கள் இதனை சாதத்துடன்  உட்கொள்வதன் மூலம் பலன் பெற முடியும். இதேபோல், பிரசவத்தின் போது ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனையைப் போக்க பெருங்காயம் பயன்படுகிறது. பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு அரை டீஸ்பூன் கீரை தங்கள் உணவில் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் அதன் வாயு எதிர்ப்பு பண்புகள். இது சில ஒவ்வாமைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.