"மிஸ்ஸைல்".. டோட்டல் ஆபீஸும் காலி.. கவர்னருக்கு என்னாச்சு?.. நல்ல வேளை தூங்கிட்டாரு!

ரஷ்யா வீசிய குண்டு வீச்சிலிருந்து உக்ரைன் மாகாண ஆளுநர் ஒருவர் உயிர் தப்பியுள்ளார். வழக்கத்தை விட அதிக நேரம் தூங்கியதால்தான் அவர் உயிர் தப்பியுள்ளார் என்பது சுவாரஸ்யமானது.

உக்ரைன் மீதான போரை நிறுத்த ஒரு பக்கம் ரஷ்யா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபக்கம் தாக்குதலையும் விடாமல் தொடர்கிறது ரஷ்யா. இந்த நிலையில் மைகோலேவ் என்ற நகர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்தத் தாக்குதலில் மாகாண நிர்வாக அலுவலகத்தின் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. அதில் 12 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலிலிருந்து மாகாண ஆளுநர் விடாலி கிம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அவர் உயிர் தப்பிய விதம்தான் செம சுவாரஸ்யமானது. வழக்கமான நேரத்திற்கு அவர் அலுவலகம் வரவில்லை. காரணம் முதல் நாள் இரவு லேட்டாக தூங்கப் போனவர், அடுத்த நாள் காலை வழக்கத்தை விட தாமதமாக எழுந்துள்ளார். விழித்து எழுந்து அலுவலகம் வருவதற்குள், ரஷ்யப் படையினர் குண்டு வீசி விட்டுப் போய் விட்டனர். அலுவலகமும் காலியாகி விட்டது. விடாலியும் உயிர் தப்பி விட்டார். ஒரு வேளை உரிய நேரத்தில் அவர் அலுவலகம் வந்திருந்தால் நிச்சயம் உயிரிழந்திருப்பார்.

அப்ரமோவிச்சுக்கு விஷம் கொடுத்தார்களா?.. “அபத்தம்”.. ரஷ்யா நிராகரிப்பு

மைகோலேவ் நகர பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளையும், நடவடிக்கைகளையும் நேரடியாக மேற்பார்வையிட்டு வருகிறார் விடாலி. இதனால்தான் இரவு அவர் தூங்கப் போக நேரமாகி விடுகிறது. அப்படி லேட்டாக தூங்கப் போய் லேட்டாக எழுந்ததால்தான் அவர் உயிர் தப்பியுள்ளார்.

உக்ரைனைப் பொறுத்தவரை மைகோலேவ் முக்கியமான நகரமாகும். இந்த நகரைப் பிடிக்க ரஷ்யப் படைகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. சரமாரியான தாக்குதலில் இந்த நகரம் ஏற்கனவே பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

ஜெலன்ஸ்கிக்கு எதிராக.. 25 பேர் கொண்ட கும்பல்.. “குறி” தப்பியது.. பரபரக்கும் உக்ரைன்!

உக்ரைன் படையினர் இந்த நகரைக் காப்பதில் தொடர்ந்து முனைப்புடன் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷ்ய விமானப்படை, ராணுவம் உள்ளிட்ட படையினரின் தொடர் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து நகரம் அவர்கள் வசம் போகாமல் காத்து வருகின்றனர்.

இருப்பினும் இன்று நடந்த ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் மாகாண நிர்வாக அலுவலகம் கடும் சேதத்தை சந்தித்து விட்டது. கட்டடத்தின் நடுப் பகுதியில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. மொத்தக் கட்டடத்தையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்திஇம்ரான் கானுக்கு பெரும்பான்மை போச்சு.. கவிழும் ஆட்சி.. இந்தியாவுக்கு ஆபத்தா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.