விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு.. கைதான 4 பேரிடம் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கைதாகியுள்ள 4 பேரிடம் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண் பாலியல் வழக்கு தொடர்பான விசாரணையை பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கைதான 4 பேருக்கு 6 நாள் நீதிமன்ற காவல் வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதையொட்டி, கைதான ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது , மாடசாமி ஆகிய 4 பேரிடம் நேற்று  சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி விசாரணை நடத்திய நிலையில் இன்று சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி விசாரணை நடத்தி வருகின்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.