28 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் நிஷாந்தி

தமிழில் 1987ல் ராமராஜன் நாயகனாக நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பானுப்பிரியாவின் தங்கை நிஷாந்தி என்ற சாந்திப்பிரியா. அதையடுத்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பரவலாக சில படங்களில் நடித்த நிஷாந்தி ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறிவிட்டார்.

தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இந்தியாவின் நைட்டிங்கேள் என்று போற்றப்படும் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தான் அவர் ரீஎன்ட்ரி கொடுக்கப் போகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், சுதந்திரத்திற்காக போராடிய லட்சிய பெண்மணி சரோஜினி நாயுடுவின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். வினய் சந்திரா இயக்கும் இப்படம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.