ஏப்., 3ல் பெங்களூரு வணிக வைசிய சங்க 53வது திருமண ஜாதக பரிவர்த்தனை கூட்டம்| Dinamalar

பெங்களூரு-பெங்களூரு வணிக வைசிய சங்கத்தின் 53வது திருமண ஜாதக பரிவர்த்தனை கூட்டம், ஏப்ரல் 3ல் நடக்கிறது.பெங்களூரு வணிக வைசிய சங்கம் சார்பில் 53வது திருமண ஜாதக பரிவர்த்தனை கூட்டம், ஏப்ரல் 3 மதியம் 1:00 மணிக்கு, ஹலசூரு ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் தண்டாயுதபாணி கோவில் மண்டபத்தில் நடக்கிறது.சங்க தலைவர் மோகன் தலைமையில், செயலர் சங்கர் முன்னிலையில் நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.கூட்டத்துக்கு வருபவர்கள் அனைவருக்கும் மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.துணைத்தலைவர் அண்ணாதுரை தலைமையில் குத்து விளக்கு ஏற்றப்படுகிறது. சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர் அனைவரும் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.சங்கத்தில் திருமண பதிவு செய்துள்ள அனைத்து ஜாதகங்களையும், சங்க உதவி செயலர் தஞ்சை கந்தசாமி தொகுத்து வழங்கவுள்ளார்.ஜாதக பரிவர்த்தனை கூட்டத்தில் பதிவு செய்யப்படவுள்ள அனைத்து ஜாதகங்களுக்கும் சங்க பதிவு பத்திரத்தில் பதிவு செய்வதுடன், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஜாதக நகல் அனைத்தும் இணைத்து தர வேண்டும்.நிறைவில் பொருளாளர் சந்திரசேகர் நன்றி கூறுகிறார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.