டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி ,ராகுல்காந்தி உள்ளிட்டோரையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்…

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்.2-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நள்ளிரவில் டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். ஏராளமான திமுகவினர் திரண்டு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டெல்லியில் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை, ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது, நீட் தேர்வு விலக்கு, மேகதாது அணை பிரச்சனை, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்த தமிழகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், டெல்லியில் ஏப்ரல் 2-ந் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்க இருக்கிறார்.மாலையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

ஏப்ரல் 1-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களையும் சந்தித்து பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.