மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன்தான்… 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு உயிருடன் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன்தான் என்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

உள்துறை அமைச்சரான ஷேக் ரஷீத், கசாப் பற்றிய ரகசிய தகவல்களை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அஜ்மல் கசாப் பாகிஸ்தானின் ஃபரித்கோட் பகுதியைச் சேர்ந்தவன் என்று நவாஸ் ஷெரீப் கசாப் பற்றிய விவரங்களை இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.