நாளை சென்னையில் பா.ம.க. அவசர செயற்குழு.! எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்., வெளியான தகவல்.!

பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை (02.04.2022) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சிவானந்தா சாலையில் பொதிகைத் தொலைக்காட்சி நிலையம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது; அதே நேரத்தில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பு குறித்தும், அதனடிப்படையிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவசர செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க உள்ளதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.