சி.பி.ஐ., நிரந்தரமானது: தலைமை நீதிபதி ரமணா கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : ”அரசியல் தலைமைகள் மாறலாம்; ஆனால், நீங்கள் நிரந்தரமானவர்கள்,” என, சி.பி.ஐ., அதிகாரிகளிடம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறினார்.

டில்லியில் சி.பி.ஐ., சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: சமீபகாலமாக சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. இதற்கு சி.பி.ஐ.,யின் செயல்பாடுகள் தான் காரணம். அரசியல் தலைமைகளுடன் உள்ள நெருக்கத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைவிட வேண்டும். ஏனெனில் அரசியல் தலைமைகள் மாறலாம். ஆனால், நீங்கள் நிரந்தரமானவர்கள்.

latest tamil news

சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளை, ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். அது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளால், போலீஸ் மீதான மதிப்பு சீரழிந்துவிட்டது. அதனால், சி.பி.ஐ., அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார், நேர்மையை கடைப்பிடித்து, மக்கள் சேவையில் முழுமனதுடன் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.