ஆதிச்சநல்லூரில் பாண்டிய மன்னர் கால நாணயங்கள் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் பாண்டிய மன்னர் கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் அகழாய்வு பணிகளுக்காக 9 இடங்களில் 32 குழிகள் தோண்டப்பட்டு, 3000 ஆண்டுகள் வரை பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் குடுவைகள், பானைகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் தற்போது பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் அச்சிடப்பட்ட 2 நாணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மரம், யானை, மீன்கள் மற்றும் ஆமைகளின் உருவங்கள் இவற்றில் பொறிக்கப்பட்டிருந்தன.

சங்க காலத்தில் கடல் சார் வாணிபம் நடந்ததை இது உறுதிப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆதிச்சநல்லூரில் 146 ஆண்டுகளாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக இது போன்ற நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.