எலி கடித்து நோயாளி பலி: மருத்துவமனை அலட்சியம்: மருத்துவர்கள் பணி நீக்கம்

தெலுங்கானா: தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேயாளியை எலி கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார், அலட்சியமாக செயல்பட்டதால் மருத்துவமனையில் பணியாற்றிய 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் அனுமங்கொண்ட மாவட்டம் பீமாரனை சேர்ந்த சீனிவாஸ் சிறுநீரகம் தொடர்பான நோய்க்காக வாரங்கல் எம்.ஜி.ம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தீவிர சிகிக்சை பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சீனிவாஸ் கால் மற்றும் கை விரல்களை எலி கடித்து இருப்பதை பார்த்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்து வாக்குவாதம் செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரசனையில் மருத்துவமனை அலட்சியமே காரணம் என தெரியவந்தது. இதை அடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சீனிவாசராவ்-ஐ இடமாற்றம் செய்தது தெலுங்கானா சுகாதாரதுறை.பணியில் இருந்த மருத்துவர்கள் இருவரை பணிநீக்கமும் செய்து உத்தரவிட்டது.மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் ஸ்ரீ எர்ரபில்லி தயாகர் ராவ். சீனிவாசை ஐதராபாத் அரசு நிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றி சிகிக்சை அளிக்க உத்தரவிட்டார் அங்கு சிகிச்சை பெற்று வந்த சீனிவாஸ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எலி கடித்ததால் சினிவாஸ் உயிர் இழந்து விட்டதாக உறவினர்கள் புகார் கூறி வருகிறார்கள். இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி எலி கடித்த நிலையில் உயிரிழந்த சம்பவம் தெலுங்கனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.