ஐ.பி.எல் 2022: டெல்லி அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்

மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்று வருகிற  10 -வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் -டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய குஜராத் அணியில்  தொடக்க வீரர் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6  விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது .
சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 46  பந்துகளில்  84  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
டெல்லி அணி சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் 
இதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாட உள்ளது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.