குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – ரிஷபம்

எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்டவர் நீங்கள். உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து எந்தவொரு முடிவையும் உறுதியாக எடுக்க முடியாமல் தவிக்க வைத்தார் குருபகவான். இப்போது 14.4.22 முதல் 22.4.23 வரை, லாப வீட்டில் வந்து அமர்கிறார்.

ரிஷபம்

இனி திட்டமிட்ட வேலைகள் தடையில்லாமல் முடியும். பணப் பற்றாக்குறை நீங்கும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிட்டும்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே… நல்ல பதில் வரும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள்.

தடைகள் நீங்கி திருமணம் கைகூடும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் சலசலப்புகள் நீங்கும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். தாமதமாகிக் கொண்டிருந்த அரசாங்க விஷயங்கள் எல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். வீடு – வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

14.4.22 முதல் 29.4.22 வரை உங்களுக்கு அஷ்டம லாபாதிபதியான குருபகவான், தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால், அலைச்சல், திடீர்ப் பயணங்கள், செலவுகள், சகோதரருடன் மனத்தாங்கல், சிறு சிறு விபத்துகள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. தொற்று நோய் வரக்கூடும். குடும்பத்தில் அதிருப்தி நிலவும். பண இழப்பு வரும்.

30.4.22 முதல் 24.2.23 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்களின் பாக்கிய ஜீவனாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கு வெற்றியடையும். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குருபகவான் வக்ரத்தில் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வந்தாலும் செலவுகள் கூடும். உடல் ஆரோக்யத்தை பார்த்துக் கொள்ளுங்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் உங்கள் தன, பூர்வ புண்ணியாதி பதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். தீடீர் பணவரவு உண்டு. சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி, திருமணம், உத்தியோகம் திருப்திகரமாக அமையும்.

வியாபாரத்தில், இதுவரையிலும் செய்ய முடியாமலிருந்த சில மாற்றங்களை இப்போது செய்வதுடன், புதிய முதலீடுகளும் செய்வீர்கள். இரும்பு, எலெக்ட்ரானிக்ஸ், ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கடையை கொஞ்சம் விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாள்கள் இனி அடிக்கடி விடுப்பில் செல்ல மாட்டார்கள். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரர்களை மாற்றுவீர்கள்.

ரிஷபம்

உத்தியோகத்தில் உங்களைக் கசக்கிப் பிழிந்த அதிகாரி வேறிடத்திற்கு மாறுவார். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். வேலைச்சுமை குறையும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். காத்திருந்தபடி பதவி – சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களிடையே நிலவி வந்த கருத்துமோதல்கள் மறையும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வேறு நிறுவனங் களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய வாய்ப்பு வரும்; ஏற்றுக் கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி எதிர்பாராத திடீர் முன்னேற்றத்தையும் அதிரடி வளர்ச்சியையும் அள்ளித் தருவதாக அமையும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.