பரீட்சைக்கான காகிதாதிகளுக்கு தட்டுப்பாடு இல்லை – கல்வி அமைச்சர்

பரீட்சை வினாத்தாள்களுக்கான காகிதாதிகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், அது தீர்க்கப்பட்டுள்ளதாகவும், அது அமைச்சு எதிர்கொண்ட பாரிய பிரச்சினையல்ல என்றும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கு தேவையான அனைத்து காகித தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை பரீட்சைகளை நடத்த அதிகளவான காகிதங்கள் தேவைப்படுவதால் அவற்றை கொள்வனசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.