புதுச்சேரி: புதுச்சேரி – திருப்பதி பயணிகள் ரயில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.
புதுச்சேரி – திருப்பதி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து திருப்பதிக்கு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் நேற்று அதிகாலை திருப்பதியிலிருந்து புறப்பட்டு மதியம் 12:30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தடைந்தது. மீண்டும் புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 2;55 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக திருப்பதிக்கு இரவு 11:00 மணிக்கு சென்றடையும்.
புதுச்சேரி – திருப்பதி ரயில் தற்போது முன்பதிவு இல்லாத விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு ரயில் இயக்கப்பட்டதால் பக்தர்கள் மற்றும் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி – திருப்பதி பயணிகள் ரயில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.புதுச்சேரி – திருப்பதி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் கொரோனா தொற்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.