10 ஆண்டாக கூட்டு பலாத்காரம்- 'கொடூர' தாய்மாமன் கேரளாவில் கைது

ராயபுரம்:

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் சிறுமியாக இருந்த போதில் இருந்தே தனது தாய்மாமனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தாய்மாமன் உறவு முறையை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன் நண்பர்களுடனும் சேர்ந்து அக்காள் மகளை நாசமாக்கிய நபர் பற்றி பரபரப்பான தகல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

காசிமேடு பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் கடந்த 1999-ம் ஆண்டு சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஓராண்டில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு ஒரு வயது இருக்கும்போது அண்ணாமலை திடீரென உயிரிழந்து விட்டார். இதையடுத்து 2-வது திருமணம் செய்து கொண்ட சாந்தி தனது பெண் குழந்தையை முதலில் ஆசிரமத்தில்  கொண்டு போய் விட்டார்.

பின்னர் 2 வயதில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த தனது தாய் மாமனான தேசப்பனின் பராமரிப்பில் அந்த குழந்தை வளர தொடங்கியது. பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத நிலையில் தாய்மாமன் தேசப்பனை தந்தையாகவே நினைத்து சிறுமியும் வளர்ந்தாள்.

சிறுமிக்கு 9 வயது ஆன பின்னர் தாய்மாமன் தேசப்பனின் பார்வையில் மாற்றங்கள் ஏற்பட்டன. தன்னை நம்பி வளரும் சிறுமி அக்கா மகள் என்றும் பாராமல் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கினார். இது நாளடைவில் அதிகரிக்க தொடங்கியது.

தாய்மாமனின் எல்லை மீறிய செக்ஸ் தொல்லையை வெளியில் சொல்ல முடியாமல் சிறுமி தவியாய் தவித்தார். ஒரு கட்டத்தில் தாய் மாமன் தேசப்பன், தனது நண்பர்களான சிவா, சீனிவாசன், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்தும் கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

அப்போது சொல்ல முடியாத அளவுக்கு 4 பேரும் சேர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளனர்.  இந்த நேரத்தில் வீடியோ எடுத்தும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

கொடூர செயல்களின் உச்சமாக சிறுமியின் உடலில் மிளகாய் பொடியை தூவியும் சித்ரவதை செய்துள்ளனர். இப்படி தாய்மாமன் தேசப்பனின் தொல்லையும், பாலியல் சீண்டலும் நாளுக்கு நாள் அதிகரித்ததால் சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார்.

பாரிமுனை பகுதியில் சுற்றி திரிந்த அவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் மீட்டு குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பெரவள்ளூரில் உள்ள காப்பகத்தில் சிறுமியை ஒப்படைத்தனர்.

செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி காப்பகத்தில் தஞ்சம் அடைந்த பிறகாவது நிம்மதியாக இருக்கலாம் என்று சிறுமி நினைத்தாள். ஆனால் அங்கும் விடாது கருப்பாக ‘செக்ஸ் தொல்லை’ சிறுமியை துரத்தியது.

காப்பக நிர்வாகியான  இசபெல் என்பவரின் சகோதரர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மேலும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி இதுபற்றி உடன் இருந்தவர்களுடன் தெரிவித்ததையடுத்து காப்பாக நிர்வாகியின் சகோதரர் அப்போது கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சிறுமியிடம் நீதிபதி நடத்திய விசாரணையின் போதுதான் 10 ஆண்டுகளாக தாய்மாமன் தேசப்பன் மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதன் பிறகே தற்போது ராயபுரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேசப்பனின் பாலியல் அத்துமீறல்களும் தெரியவந்துள்ளது.

தேசப்பனின் பாலியல் தொல்லைக்கு அவரது மனைவி ரேதி, அக்காள் சாந்தி (சிறுமியின் தாய்) ஆகியோர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி பாலியல் தொல்லைக்குள்ளான சம்பவத்தை மறைத்ததாக கூறி  குற்றம் சாட்டப்பட்டதன் பேரில் காப்பக நிர்வாகியான இசபெல்லும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 21 வயது ஆகிறது. பாலியல் ரீதியாக 10 ஆண்டுகளாக அவர் அனுபவித்து வந்த கொடுமை தற்போது தான் முழுமையாக வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தாய்  மாமன் தேசப்பன் கேரளாவில் இன்று கைது செய்யப்பட்டார்.

சென்னையில் இருந்து சென்ற தனிப்பட்ட போலீசார் சுற்றி வளைத்து தேசப்பனை பிடித்தனர்.

தேசப்பனின் மனைவி ரேவதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேசப்பன் கேரளாவில் வேலைக்காக சென்றது தெரிய வந்தது. இதன் அடிப்படையிலேயே போலீசார் அங்கு விரைந்து சென்று தேசப்பனை பிடித்துள்ளனர். தலைறைவாக உள்ள அவரது நண்பர்களான சிவா, சீனிவாசன், ரமேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கைதான தேசப்பனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தும் போது பாலியல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.