இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,096 பேருக்கு கொரோனா; 81 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 1,447 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..!

டெல்லி: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று ஆக 1,260 இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 1,096 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,28,131 ஆக பதிவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1447 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,24,93,773 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவுக்கு 81 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,21,345 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,013 ஆக குறைந்துள்ளது. மேலும், நாட்டில் இதுவரை 1,84,66,86,260 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரேநாளில் 12,75,495 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.