எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை கைது.!

தமிழக மீனவர்கள் இந்திய இலங்கை கடல் எல்லைப் பகுதியான கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

கைது செய்த சில நாட்களில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது விசைப்படகுகள் மற்றும் விடுவிக்கப்படுவதில்லை இதனால் தமிழக மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.