சாலை முழுவதும் எரிந்த சடலங்கள், இராணுவ டாங்கிகள்: பகீர் கிளப்பும் உக்ரைன் நகரம்


உக்ரைனின் புச்சா நகரமானது தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் கனவுகளுக்கு கல்லறையாக அமைந்ததாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில், ரஷ்ய துருப்புகள் புச்சா நகரை சின்னா பின்னமாக்கியுள்ளது.
பிப்ரவரி 24ம் திகதி ரஷ்ய துருப்புகள் உக்ரைனுக்குள் புச்சா வழியாகவே நுழைந்துள்ளதாகவும்,
பதிலடியாக, உக்ரைன் துருப்புகள் ரஷ்ய இராணுவ டாங்கிகள் அணிவகுப்பை மொத்தமாக சிதைத்தது.

இதனாலையே, கீவ் நகரை கைப்பற்றும் ரஷ்யாவின் திட்டம் சுக்கலானது.
இந்த நிலையில், புச்சா நகரில் இருந்து கடைசி ரஷ்ய இராணுவ வீரரும் வெள்ளிக்கிழமை வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரஷ்யாவின் இந்த நகர்வானது, கிழக்கு உக்ரைனில் கவனத்தை செலுத்தவே ரஷ்யா முன்னெடுத்துள்ளதாக உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், புச்சா நகரில் ரஷ்ய இராணுவம் நுழைந்த 2 அல்லது மூன்றாவது வாரத்தில், தங்களது வேகத்தை இழந்ததாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், புச்சா நகரில் நுழைந்த ரஷ்ய துருப்பில் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட வீரர்களே இருந்துள்ளனர் எனவும்,
போதிய போர் பயிற்சி இல்லாமல், அவர்கள் திணறியதாகவும், ஆனால் கொடூரமான தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய துருப்புகள் வெளியேறி, புச்சா நகரில் உக்ரைன் இராணுவம் நுழந்த போது, தெருவில் மட்டும் எர்ந்த நிலையில் 20 சடலங்களை காண நேர்ந்ததாகவும்,
பின்னால் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் பல சடலங்களை மீட்டுள்ளதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புச்சா நகர மேயர் தெரிவிக்கையில், ஒரே குழியில் சுமார் 280 சடலங்களை மொத்தமாக புகைக்கும் அவல நிலையும் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீண்ட 38 நாட்களுக்கு பின்னர் முதன்முறையாக ரொட்டி சாப்பிட்டதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, பூட்டப்பட்டிருந்த பல குடியிருப்புகளில் ரஷ்ய துருப்புகள் புகுந்து கொள்ளையிட்டும் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.