நாளை முதல் உதயமாகிறது 13 புதிய மாவட்டங்கள் – முழு லிஸ்ட் இதுதான்!

ஆந்திர மாநிலத்தில், நாளை முதல், புதிதாக 13 மாவட்டங்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட உள்ளன.

அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன. இந்த 13 மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள் பிரிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆந்திர மாநில முதலமைச்சராக
ஜெகன் மோகன் ரெட்டி
பதவி ஏற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.

இதை அடுத்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களை 26 ஆக பிரிப்பது தொடர்பாக, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு புதிய மாவட்டங்களின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. இதற்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் சம்மதம் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு நாளை முதல் 26 மாவட்டங்களாக உதயமாகின்றன. நாளை திங்கட்கிழமை காலை 9.05 மணி முதல் 9.45 வரை
புதிய மாவட்டங்கள்
குறித்த இறுதி அறிக்கை வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக மாவட்டங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன. புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி சித்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு சித்தூர் மாவட்டமும், திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு பாலாஜி மாவட்டம் நாளை முதல் செயல்பட உள்ளது.

இது தொடர்பாக ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

புதிய மாவட்டங்களின் மறுசீரமைப்பு செயல்முறையை சுமுகமாக்க முதலமைச்சர் வழிகாட்டுதலின் கீழ் நான்கு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. புதிய மாவட்டங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், 13 புதிய மாவட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை தொடங்கி வைக்கிறார். புதிய மாவட்டங்களின் இணையதளங்கள் மற்றும் கையேடுகளை வெளியிடுவார். ஏப்ரல் 4 ஆம் தேதி மாவட்ட அலுவலகங்களில் அதிகாரிகள் பொறுப்பேற்கும் வகையில் அலுவலக ஒதுக்கீடு பணிகளை எளிதாக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த செய்திமோடிக்கு எதிராக அணி திரளும் தென் மாநிலங்கள்… கேரளாவில் பிள்ளையார் சுழி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.