மகனுக்காக இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர் – யார் தெரியுமா?

தமிழ், தெலங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஒருவர், தனது மகனுக்காக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் 90-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சரண்ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா உள்ளிட்ட 9 மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சரண்ராஜ் நடித்திருக்கிறார். நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர்.

image

இதனிடையே, 2000-ம் ஆண்டுக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை சரண்ராஜ் வெகுவாக குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில், தற்போது அவரின் மகன் தேவ் நடிக்கும் புதிய திரைப்படத்தை சரண்ராஜ் இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. அவரின் மகனான தேவ், பைலட்டாக பணியாற்றி வந்தார். ஆனால், கொரோனா காலக்கட்டத்தில் அந்த வேலையில் இருந்து விலகி, நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு தற்போது சினிமா துறைக்கு வந்துள்ளார்.

image

இந்த திரைப்படத்தை கதை, திரைக்கதைு, வசனம் எழுதி இயக்குகிறார் சரண்ராஜ். இதற்கான படப்பிடிப்பு சென்னை ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. மீனவ இளைஞனுக்கும், மார்வாடி பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதலை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.