இறைச்சி கடைகளை மூட உத்தரவிடவில்லை| Dinamalar

லக்னோ–உத்தர பிரதேசத்தில், ”நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை,” என, அம்மாநில கூடுதல் தலைமை செயலர் நவ்நீத் சேகல் கூறி உள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, அலிகார் நகர் தவிர, மாவட்டத்தின் பிற பகுதிகளில் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. காஜியாபாத் நகரில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, பின் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மேலும் சில இடங்களில் நவராத்திரி நாட்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என செய்திகள் வெளியாகின.இது குறித்து, கூடுதல் தலைமைச் செயலர் நவ்நீத் சேகல் நேற்று கூறுகையில், ”நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட வேண்டும் என, அரசு தரப்பில் உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.