உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல்.. சாலைகளில் சடலங்கள் சிதறிக்கிடக்கும் கோரக் காட்சிகள்..!

ரஷ்யாவின் கோர தாக்குதலால் உக்ரைனின் புச்சா ( Bucha) நகரில் சாலைகள் தோறும் அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் சிதறிக் கிடக்கும் கோரக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கீவ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் முழுமையாக விரட்டியடிக்கப்பட்டிருக்கும் நிலையில், உக்ரைனின் பதிலடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்யா அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் கீவ் மற்றும் செர்னிவ் பகுதிகளில் இருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள், தலைநகர் கிவ்வை ஒட்டிய புச்சா நகரில் அப்பாவி மக்கள் சுமார் 300 பேரை தலையில் குறிவைத்து படுகொலை செய்து புதைகுழிகளில் வீசிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.

பல இடங்களில் பல சடலங்கள் முதுக்கு பின்னால் கைகள் கட்டப்பட்டு, வெள்ளை துணியால் சுற்றப்பட்டு இருந்தது. கொடூரமாக மக்களை கொன்ற ரஷ்யாவுக்கு ஐ.நா சபை உள்பட உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.