சமந்தா – நாக சைதன்யா விவகாரத்தில் புதிய திருப்பம்: விரைவில் குட் நியூஸ்..?

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
சமந்தா
. தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக விவாகரத்தை அறிவித்தனர். அதன்பின்னர் சமந்தா மீண்டும் படங்களில் நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். விவாகரத்திற்கு பிறகு கிளாமரில் கலக்கி வருகிறார் சமந்தா.

மாஜி மனைவிக்கு எதிராக டி. இமான் பரபரப்பு புகார்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இந்நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரபல பெண் இயக்குனரான
நந்தினி ரெட்டி
, தான் இயக்க போகும் புதிய படத்தில்
நாக சைதன்யா
, சமந்தா ஜோடியை ஒன்று சேர்க்க முயற்சி செய்து வருகிறாராம். 2019 ம் ஆண்டு
ஓ பேபி
படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சமந்தா, நாக சைதனயாவிடம் மற்றொரு படத்தில் சேர்ந்து நடிக்க கதை கூறி உள்ளார்.

அது மட்டுமல்லாமல் நந்தினி ரெட்டிக்கு ரொம்பவே நெருங்கிய தோழியாம் சமந்தா. இதனால் இவர் இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்க சமந்தா கிரீன் சிக்னல் காட்டுவார் என எதிரபார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினியும், ராகவா லாரன்ஸும்; குட்டி Flashback!

அடுத்த செய்திதனுஷின் போக்கை மாற்றிய அந்த தருணம்..மீண்டும் நடக்குமா ?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.