தனுஷுக்கு ஒர்க்அவுட் ஆகுது, ஐஸ்வர்யாவுக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது

பல ஆண்டுகளாக ட்விட்டரில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
. இந்நிலையில் தனுஷை பிரிந்த பிறகு ட்விட்டரில் படு ஆக்டிவாகிவிட்டார்.

அவ்வப்போது புகைப்படங்களுடன் ட்வீட் செய்து வருகிறார். அவர் தன் சந்தோஷத்திற்காக ட்வீட் போடுகிறார். ஆனால் அவர் என்ன ட்வீட் போட்டாலும் சமூக வலைதளவாசிகள் விளாசுகிறார்கள், இல்லை கிண்டல் செய்கிறார்கள்.

விளம்பரம் தேட
ஐஸ்வர்யா
இப்படி எல்லாம் செய்கிறார் என்று விமர்சிக்கிறார்கள். தன் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டால் கூட விளாசுகிறார்கள்.

யார் மடியில் உட்காருவதுனு விவஸ்த வேணாம்?: ஐஸ்வர்யாவை விளாசும் நெட்டிசன்ஸ்
அதே சமயம்
தனுஷ்
ஏதாவது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டால் அதற்கு லைக்ஸ் வந்து குவிகிறது. அவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டால், இந்த தனுஷுக்கு தான் பிள்ளைகள் மீது எம்புட்டு பாசம் என்கிறார்கள்.

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் தன் மகன்களுடன் தனுஷ் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தவர்கள், தனுஷின் பாசத்தை மெச்சினார்கள்.

அவர் என்ன செய்தாலும் ஒர்க்அவுட் ஆகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா என்ன செய்தாலும் விமர்சனத்திற்குள்ளாகிறார்.

கெரியரை பொறுத்தவரை ஐஸ்வர்யாவின் கையில் தற்போது 2 பாலிவுட் படங்கள், ஒரு தமிழ் படம் இருக்கிறது. ஓ சாத்தி சல் படம் மூலம் பாலிவுட் செல்கிறார் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்திபிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்…! ரசிகர்களை அலார்ட் செய்த நடிகை…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.