திருப்பத்தூரில் உள்ள சேம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தாருக்கும் ரூ.2 லட்சம் நிதியுதவி

திருப்பத்தூரில் உள்ள சேம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

தெலுங்கு வருடப்பிறப்பன்று, புலியூர் கிராமத்தில் இருந்து 38 பேர், பிக் அப் வேன் மூலம் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது வழியில் 50 அடி ஆழ பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில், 11 பேர் உயிரிழந்தனர். மீதமிருந்தவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர்.

முதலமைச்சர் அறிவித்ததன் படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும் அமைச்சர் எ.வ. வேலு இன்று நேரில் சென்று வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.