ஆப்பிரிக்கா நாடான லிபியாவில் வேலை இல்லாத திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. இதன் விளைவாக வறுமையும்வாட்டி வதைப்பதால் வாழ்வாதாரம் தேடி லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
எல்லை பாதுகாப்பு படையினரின் சோதனைக்கு அஞ்சி அவர்கள் திருட்டுத்தனமாக கடல் வழியே படகுகளில் பயணிக்கின்றனர். இப்படிதான் நேற்றிரவு லிபியாவில் இருந்த ஒரு படகில் சுமார் 100 பேர் ஐரோப்பாவுக்கு பயணித்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலிலே படகு நின்றுவிட்டது. உதவிக்கு யாருக்கும் வராததால் நாள் கணக்கில் படகில் தத்தளித்து கொண்டிருந்தவர்கள், உயிர் பிழைப்பதற்காக படகில் இருந்து கடலில் குதிக்க தொடங்கினர்.
உக்ரைனில் கொடூரம்: 400 சடலங்கள் கண்டெடுப்பு!
அப்போது எதிர்பாராத விதமாக படகு அப்படியே தலைக்குப்புற கவிழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினர் விரைவதற்குள் படகில் பயணித்த 100 பேரில் 90 பேர் வரை இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பஞ்சம் பிழைக்க போன இடத்தில் கடலில் மூழ்கி பொதுமக்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த செய்தி”தப்பை ஒத்துக்கங்க”.. ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக .. மஹளா ஜெயவர்த்தனே ஆவேசம்!