அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுத்துள்ள நிலையில், மாதிவெல பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வீடுகள் தற்போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மக்கள் பொருட்களை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் நீண்ட நேரம் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் காலிமுகத்திடல் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது மாதிவெல பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வீடுகள் தற்போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: Outside MP’s Quarters in Madiwela. pic.twitter.com/FVQI1rRTX3
— DailyMirror (@Dailymirror_SL) April 4, 2022