வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டேராடூன்: உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி, தனது சொத்துக்கள் அனைத்தையும் காங். எம்.பி., ராகுலுக்கு உயிலாக எழுதி கொடுத்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் புஷ்யா மஞ்சியால், என்ற 78 வயது மூதாட்டி. இன்று ‘உயில்’ பத்திரம் ஒன்றை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்தார். அந்த உயிலில், தனக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் காங். எம்.பி., ராகுலுக்கு எழுதி வைத்துள்ளதாக தெரிவித்தார். அந்த உயில் பத்திரத்தை ராகுல் சார்பாக காங். முன்னாள் தலைவர் பிரீத்தம் சிங் பெற்றுக்கொண்டார்.
இது குறித்து அந்த மூதாட்டி புஷ்பா மஞ்சியால் கூறியது, மறைந்த பிரதமர்களான இந்திரா, இவரது மகன் ராஜிவ் ஆகியோர் நாட்டின் ஒற்றுமை, ஒருமை பாட்டிற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர்.
ராகுலுக்கு |
அவர்களது குடும்பத்தைச்சேர்ந்த சோனியா, ராகுல் ஆகியோர் மிகுந்த சேவை செய்து நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் என்னை மிகவும் கவர்ந்து வருகிறது. எனவே எனது அனைத்து சொத்துக்களையும் ராகுலுக்கு உயில் எழுதி கொடுக்கிறேன் என்றார்.
Advertisement