ஸ்டார் ஹோட்டலில் போதை விருந்து… சிக்கும் அரசியல், சினிமா பிரபலங்களின் வாரிசுகள்?

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் பஞ்சரா ஹில்ஸ் ஏரியா சர்வதேச அளவில் மிகவும் பிரபலம். இங்குள்ள ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டலில் போதைப் பொருட்களுடன் உல்லாச பார்ட்டி நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குறிப்பிட்ட ஓட்டலை போலீசார் அதிரடியாக முற்றுகையிட்டனர். அப் போது அங்கு பிரபல தெலுங்கு நடிகரும், சிரஞ்சீவியின் சகோதரருமான நாகபாபுவின் மகள், காவல்துறை அதிகாரியின் மகள், எம்பியின் மகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாரிசுகள் என மொத்தம் 150 பேர் அந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

விருந்தில் போதைப் பொருட்கள் பரிமாறப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, உல்லாச பார்ட்டியில் பங்கேற்ற அனைவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் அவர்கள் அனைவருக்கும் ரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த பரிசோதனை முடிந்து அனைவரும் விடுக்கவிக்கப்பட்டுவிட்டாலும், சோதனையில் யாரேனும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாக உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்

பார்ட்டி நடைபெற்ற இடத்தில் இருந்து கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பரிசோதனை முடிவில் பல முக்கிய புள்ளிகளின் வாரிசுகள் சிக்குவார்கள் என தெரிகிறது.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து நடிகர் நாகபாபு அளித்துள்ள விளக்கத்தில், ” எனது மகள்
நிகாரிகா
சம்பந்தப்பட்டப்பட்ட ஹோட்டலுக்கு சென்றது உண்மைதான். ஆனால் அங்கு அவர் எந்தவித போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை. போலீசாரின் முதல்கட்ட விசாரணைக்கு பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுவிட்டார்” என்று நாகபாபு கூறியுள்ளார்.

அடுத்த செய்திநாடு முழுதும் மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் மோடி எடுக்கும் முடிவு?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.