இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அவரது பயணம் இரண்டு முறை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இம்மாத இறுதியில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அதன்படி, நடப்பு ஏப்ரல் மாதத்தின் 4வது வாரத்தில் அவர் இந்தியாவுக்கு வருகிறார். தலைநகர் டெல்லிக்கு சிறப்பு விமான நிலையத்தில், இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார்.

“ஒரு ஆணியும் புடுங்க வேணாம் கிளம்பு”.. கோத்தபயாவுக்கு எதிராக களம் குதித்த தமிழர்கள்!

அப்போது, இரண்டு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் இரு நாட்டு பிரதமர்களிடையே ஓர் தனிப்பட்ட சந்திப்பு குறித்து தொலைபேசியில் விவாதிக்கப்பட்டது. அப்போது இரு நாட்டு உறவை மேம்படுத்துவது இருவரும் ஒப்புக் கொண்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடந்த காலநிலை உச்சி மாநாட்டின் போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் – இந்தியப் பிரதமர்
நரேந்திர மோடி
ஆகியோர் கடைசியாக நேரில் சந்தித்தனர். வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இரு நாட்டு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதில் இரு நாட்டு தலைவர்களும் உறுதியுடன் உள்ளனர்.

அடுத்த செய்தி”ரிசைன் பண்ண மாட்டேன்.. உங்க கிட்ட 113 பேர் ஆதரவு இருக்கா”.. கோத்தபயா பிடிவாதம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.