இன்று நள்ளிரவு வரை முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!

பெரு நாட்டில் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் தீவிரமான நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை பல்வேறு நாடுகளில் உயர்ந்துள்ளது. இதனால், உலக நாடுகள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில் தென் அமெரிக்க நாடான பெரு நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக உணவு பெருட்களின் விலையும் அதிகரித்துள்ளன. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், பொட்டாஷ், அம்மோனியா, யூரியா உள்ளிட்ட விவசாய உரங்களின் விலையும் உயர்ந்ததால், விவசாயிகளும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் தலைநகர் லிமாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் சுங்கச்சாவடிகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.

இதை அடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து பெரு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ அமைச்சரவை கூட்டம் நடத்தினார். அதில் போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, “அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏப்ரல் 5 ஆம் தேதி அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 11.59 மணி வரை ஊரடங்கு அமலாக உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

அடுத்த செய்திஇந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.