எலான் மஸ்க் மருந்து வேலை செய்கிறது! அம்சமான ஆப்ஷன்களை அறிமுகம் செய்யும் ட்விட்டர்!

உலகளவில் நம்பகத்தன்மை பெற்ற சமூக வலைத்தளங்களில் முன்னணி வகித்து வருகிறது ட்விட்டர். வெறும் 280 வார்த்தைகளில் சொல்ல வந்ததை சொல்லிவிட்டுச் செல்லுங்கள் என்று
ட்விட்டர்
பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், இதன் மீது மோகம் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில், ட்விட்டர் பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட Twitter Spaces வசதி பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து நிறுவனம் தளத்தின் மேம்பாட்டுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏன் இந்த போன்கள் வெடிக்கிறது? சரியான காரணங்கள் என்ன?

ட்விட்டர் புதிய அம்சம்

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, ட்விட்டர் இரண்டு கணக்குகள் இணைந்து ட்வீட் பதிவிடும் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, இந்த அம்சமானது Meta தலைமையின் கீழ் இயங்கும் பிரபல புகைப்படங்கள் பகிரும் தளமான Instagram தளத்தில் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சோதனை முடிந்ததும் விரைவில் இந்த அம்சம் பயனர்களுக்காக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பயனர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும், Edit Button அம்சத்தினையும் விரைவில் ட்விட்டர் அறிமுகம் செய்யும் எனத் தகவல்கள் கசிந்துள்ளது. இதுவரை ட்விட்டரில் உள்ளிட்ட பதிவை நீக்க தான் முடியுமே தவிர, அதனை திருத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 1ஆம் தேதி, இது தொடர்பான ஒரு மறைமுக ட்விட்டையும் நிறுவனம் பதிவிட்டிருந்தது.

ட்விட்டர் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% விழுக்காடு பங்குகளை வாங்கி டெக் துறைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கு முறை அமைப்பிற்கு அளித்த அறிக்கையில் ட்விட்டர் நிறுவனத்தின் 7 கோடியே 34 லட்சம் ட்விட்டர் பங்குகள் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் ட்விட்டரின் பெரும்பாலான பங்குகளை வைத்திருக்கும் தனிநபராக வலம்வரத் தொடங்கியுள்ளார் டெஸ்லா நிறுவனர். தொடர்ந்து இன்றைய வர்த்தகத்தில் ட்விட்டர் பங்குகள் 28% விழுக்காடு உயர்வை சந்தித்துள்ளது.

குண்டை தடுத்த நிறுத்திய ஹெட்போன் – நம்பமுடிகிறதா!

ட்விட்டர் பேச்சு சுதந்திரம்

சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் நியாயமான பேச்சுரிமைக்கு இடமளிக்கப் படுகிறதா என எலான் மஸ்க் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார். அப்போது பெரும்பாலான ட்விட்டர் பயனாளிகள் இல்லை என்றே தங்களின் கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.

இதற்கு உடனடியாக பதிலளித்திருந்த அவர், “ட்விட்டரில் பயனர்களின் பேச்சுரிமைக்கு இடமளிக்கப் படுவதில்லை” எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, புதிய சமூக வலைத்தளத்தை எதிர்பார்க்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒரு சில மணி நேரங்களில், எலான் மஸ்க்கை பின் தொடரும் நபர் அந்த ட்விடிற்கு பதில் பதிவிட்டிருந்தார். அதில், “ஒரு Open Source தளத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும். அதில், அனைவராலும் வெளிப்படை தன்மையுடன் செயல்பட முடியும்” என்று தெரிவித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.

மேலதிக செய்திகள்:

இனி சிம் கார்டு தேவையில்லை – Android 13 கொண்டுவரும் புதிய அம்சம்!வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள 6 புதிய அம்சங்கள்!நம்ம ஊரு டாடாவின் புதிய ‘Neu’ சூப்பர் ஆப் – அனைத்து சேவைகளும் விரல் நுனியில்!

அடுத்த செய்திஉங்கள் வைஃபை துண்டிக்கப்படுவதற்கான காரணங்கள்? சரிசெய்ய எளிமையான டிப்ஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.