கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! அமைச்சர் எச்சரிக்கை.

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் ரேசன் கடைகளில் ஆய்வு செய்த அமைச்சர், பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,  அரிசி கடத்தல், ரேஷன் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுபோல குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறியவர், இது தொடர்பான புகார் அளிக்க 98840 00845 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியவர்,  அனைத்து நியாய விலைக் கடை பணியாளர்களும் எந்தவித நிர்பந்தங்களுக்கும் அடிபணியாமல் பணியாற்ற வேண்டும் எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.