ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்படும் பிரித்தானியர்… காரணம்?


ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரித்தானியர் ஒருவர் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட உள்ளார்.

பெர்லினிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராக பணியாற்றியவர் David Smith (57). அவர், ரஷ்ய உளவாளிகளுக்கு பிரித்தானிய அதிகாரிகளின் பெயர்கள் முதலான சில தகவல்களைக் கொடுத்து, அதற்கு பதிலாக பணம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஆகத்து மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

பொலிசார் அவரது வீட்டை சோதனையிட்டபோது, அங்கு ரஷ்ய கொடி, சோவியத் இராணுவ தொப்பிகள் மற்றும் இராணுவ வரலாறு மற்றும் ஏராளமான ரஷ்ய மொழிப் புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை நாடுகடத்துவதென முடிவான நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் Smith.

அவர் 16 ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்ந்துவருவதாகவும், ஜேர்மனியை தன் தாய் நாடாக கருதுவதாகவும் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதிட்டார்.

ஆனால், அவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாததால் அவர் பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்.
நாளை பிரித்தானியாவுக்குக் கொண்டுவரப்படும் Smith, வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.