தவறான தகவல்களை பரப்பியதாக 22 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வெளிநாடுகளுடனான உறவுகள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக 22 யூடியூப் சேனல்களை முடக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டின் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மூன்று டிவிட்டர் கணக்குகள், ஒரு முகநூல் கணக்கு, செய்தி இணையதளம் ஆகியவற்றையும் முடக்கியுள்ளது.

முடக்கப்பட்ட யூடியூப் சேனல்களில் நான்கு, பாகிஸ்தானை சேர்ந்தவை என்றும் ஒட்டுமொத்தமாக சுமார் 260 கோடி பார்வைகளை அந்த 22 யூடியூப் சேனல்கள் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைன் விவகாரம் குறித்து தவறான தகவலை பகிர்ந்த காரணத்திற்காக சில இந்திய யூடியூப் சேனல்கள் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.