தொழிலாளர்கள் 5 பேர் பலி| Dinamalar

புடாபெஸ்ட்:ஹங்கேரியில், தண்டவாளத்தின் குறுக்கே வந்த லாரி மீது ரயில் மோதிய விபத்தில், ஐந்து தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் தெற்கு பகுதியில் உள்ள மைண்ட்ஸ்சென்ட் நகரில், நேற்று காலை பயணியர் ரயில் சென்று கொண்டு இருந்தது.அப்போது, ஏழு தொழிலாளர்களுடன் தண்டவாளத்தின் குறுக்கே வந்த லாரி மீது, ரயில் மோதியது. இதில், லாரி தலைகீழாக கவிழ்ந்ததில், ஐந்து தொழிலாளர்கள் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களின் நிலை ஆபத்தாக உள்ளதாக, டாக்டர்கள் கூறினர்.
லாரி மீது வேகமாக மோதியதால், ரயிலும் தடம் புரண்டது. அதிலிருந்த 10 பயணியர், லேசான காயம் அடைந்தனர். அப்பகுதியில் சாலை மூடப்பட்டு, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.