நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு – முக்கிய அரசியல்வாதி தகவல்



நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருந்தாலும் நாளைய தினம் அந்த நிலை மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் தலைதூக்கியுள்ளன.

இதன் காரணமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் இன்றைய தினம் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.