நியூயார்க்கில் தலைப்பாகை அணிந்து சென்ற சீக்கிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சீக்கிய அமைப்பு கண்டனம்.!

அமெரிக்காவின் நியூயார்க்கில், தலைப்பாகை அணிந்து சென்ற சீக்கிய முதியவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு சீக்கிய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

70 வயதான நிர்மல் சிங் என்பவர் சீக்கியர் கோவிலான குருத்வாராவுக்கு சென்று திரும்பியபோது குயின்ஸ் பகுதியில், மர்மநபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படத்தில், தாக்குதலில் தலையில் படுகாயமடைந்தவரின் தலைப்பாகை மற்றும் ஆடைகளில் இரத்தம் காணப்படுகிறது, இது தொடர்பாக நியூயார்க் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.