பிரேசிலில் பூர்வக்குடி நிலங்களில் சுரங்கங்கள், ஆலைகள் அமைக்கத் திட்டம்.. அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த திரண்ட பழங்குடி மக்கள்

பிரேசில் நாட்டில், பூர்வக்குடி மக்களின் நிலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க அனுமதிக்கும் சட்ட மசோதாவை கண்டித்து போராட்டம் நடத்த ஏராளமான பழங்குடி மக்கள் தலைநகர் வந்தடைந்தனர்.

பிரேசில் நாட்டு நிலப்பரப்பில் 13 சதவீதப் பகுதி பூர்வக்குடி நிலங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு அங்கு நீர்மின் அணைகள், நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் உர உற்பத்தி ஆலைகள் அமைக்க அந்நாட்டு அரசு அனுமதி அளிக்க உள்ளது.

இதனை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இனங்களைச் சேர்ந்தவர்கள் தலைநகர் பிரேசிலியா-வில் 10 நாட்களுக்கு போராட்டம் நடத்த திரண்டுள்ளனர். இதற்காக அமைச்சகங்கள் முன்னிலையில் கூடாரங்கள் அமைத்து அவர்கள் தங்கியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.