பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் கேசவராமன் இல்லத் திருமண விழா| Dinamalar

புதுச்சேரி : பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் கேசவராமன்- ஜெயமணி இல்லத் திருமண விழா நடந்தது.புதுச்சேரி, லாஸ்பேட்டை பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் கேசவராமன்- ஜெயமணி ஆகியோரின் மகள் பொறியாளர் ஜெயபாரதி, புதுச்சேரி நத்தைமேடு ராஜாராம்-வசந்தா ஆகியோரின் மகன் பொறியாளர் புகழொளி ஆகியோர் திருமணம், இ.சி.ஆர். ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கடந்த 3ம் தேதி நடந்தது.

மணமக்களை பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், ராமலிங்கம், சிவசங்கர், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் நேரில் வாழ்த்தினர். மூத்த வழக்கறிஞர்கள் ரங்கநாதன்,

கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி சிட்டி யூனியன் வங்கி தலைமை மேலாளர் வினோத்குமார், நில வணிகர் புவனேஸ்வரன், தொழிலதிபர்கள் ,நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.குறிஞ்சி நகர் தாமோதரன்-மல்லிகா ஆகியோர் வரவேற்று, நன்றி கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.