வட கொரியாவைத் தாக்கினால், தென் கொரியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் – வட கொரிய அதிபரின் தங்கை கிம் யோ ஜாங் கடும் எச்சரிக்கை

வட கொரியாவைத் தாக்க நினைத்தால் தென் கொரியா மீது அணு ஆயுத தாக்குதல் தொடுக்கப்படும் என அதிபர் கிம் ஜாங் அன்னின் தங்கை கிம் யோ ஜாங் (Kim Yo Jong) எச்சரித்துள்ளார்.

வட கொரியாவின் எந்தப் பகுதி மீதும் துல்லியமாகத் தாக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணைகள் தங்கள் வசம் உள்ளதாக தென் கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து கிம் யோ ஜாங் (Kim Yo Jong) வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரிய நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தை ஆக்கிரமிக்க நினைத்தாலும், கனவில் கூட கற்பனை செய்ய முடியாத பேரழிவை தென் கொரியா சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். தவிர்க்க முடியாத சூழலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வட கொரியா தயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.