20 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சார்லஸ் டார்வின் குறிப்பேடுகள் மீண்டும் நூலகத்தில் வைக்கப்பட்டன

இங்கிலாந்தில், 20 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சார்லஸ் டார்வினின் 2 குறிப்பேடுகள், மீண்டும் திருடு போன நூலகத்திலேயே விட்டுச் செல்லப்பட்டுள்ளன.

மனித குல பரிணாம வளர்ச்சி குறித்து அறிஞர் சார்லஸ் டார்வின் 185 ஆண்டுகளுக்கு முன்  கைப்பட எழுதிய 2 ஆய்வுக்குறிப்பேடுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

2000-ம் ஆண்டு புகைப்படம் எடுப்பதற்காக பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுக்கப்பட்ட போது அவை திருடு போயின.

தற்போது மர்ம நபர் ஒருவர், ஈஸ்டர் வாழ்த்துச்செய்தியுடன் அந்த 2 புத்தகங்களையும் பரிசுப் பெட்டியில் வைத்து நூலகத்தில் விட்டுச்சென்றுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.