3 ஹீரோக்களுக்கு திருப்பம் தருவாரா தீர்க்கதரிசி?

அஞ்சாதே படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜ்மல், அதன்பிறகு போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் கோ படத்தின் மூலம் வில்லன் ஆனார். மீண்டும் சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் அதன்பிறகும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மத்திய சென்னை, காட்டு பயசார் இந்த காளி, படங்களை தயாரித்து அதில் தானே ஹீரோவாக நடித்தவர் ஜெய்வந்த். ஹீரோவாக ஜெயிக்க போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர்.

சிவாஜியின் பேரன் துஷ்யந்த் (ராம்குமாரின் மகன்). சக்சஸ் என்ற படத்தில் அறிமுகமாக அதன்பிறகு மச்சி என்ற படத்தில் நடித்தார். இரண்டு படமுமே கை கொடுக்காத நிலையில் நடிப்பில் இருந்து விலகினார்.

இந்த மூவரும் தற்போது தீர்க்கதரிசி என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சதிஷ் குமார் தயாரிக்கிறார், பி.ஜி.மோகன் , எல்.ஆர்.சுந்தரபாண்டி இணைந்து இயக்குகின்றனர். ஜி.பாலசுப்பிரமணியம் இசை அமைக்கிறார், ஜெ.லட்சுமண குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. ரீ எண்ட்ரி ஆகும் மூன்று ஹீரோக்களுக்கும் தீர்க்கதரிசி திருப்பம் தருவாரா என்பது படம் வெளியானதும் தெரியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.