குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே பொதுத்தேர்வு நடைபெறும் – அரசு தேர்வுத்துறை இயக்ககம்

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறைக்கப்பட்ட பாட்டத்திட்டத்தினை வழங்கி, இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.