சென்னையில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்க 8 இடங்களில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் துரைமுருகன்

சென்னையில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 8 இடங்களில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கோதையாறு, கொள்ளிடம், வெண்ணாறு, பரம்பிக்குளம் ஆழியாறு வடிநிலப் பகுதிகளில் பாசனக் கட்டமைப்புகளை ஒருங்கிணைந்த முறையில் மறுசீரமைக்கும் பணிகள் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு, விளவங்கோடு வட்டங்களில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்க 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பன உட்பட 25 அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.