போதைப்பொருள் வைத்திருந்த இஸ்ரேல் நாட்டு பெண்மணிக்கு மரண தண்டனை

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த இஸ்ரேல் நாட்டு பெண்மணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் புகைப்பட ஸ்டூடியோ நடத்தி வந்த ஃபிடா கிவான் கடந்தாண்டு வேலை நிமித்தமாக துபாய் சென்றுள்ளார்.

ஒரு வாரத்துக்குப் பின், பிடா கிவான் தங்கி இருந்த வீட்டை போலீசார் சோதனையிட்ட போது 500 கிராம் கொக்கைன் போதைப்பொருள் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்ய உள்ளார்.

துபாயில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வெளிநாட்டினர் புரிந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.