10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – உலக முதலீட்டாளர்கள் மாநாடு! சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தகவல்

சென்னை:  திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் உலக முதலீட்டாளார் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறித்து விதி எண் 110-கீழ் முதலமைச்சர் அறிக்கை வாசித்தார்.

அப்போது,  துபாய் பயணத்தில் ரூ.6,100 கோடிக்கு புரிந்துணர்வு  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும்,  கடந்த  10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கடந்த 10 மாதங்களில் ரூ. 68,375 கோடியில் 2.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. முதலீடுகளை ஈர்க்க புதிய பணி குழு விரைவில் அமைக்கப்படும், என்று தெரிவித்தார்.

மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்றும், இ ந்த ஆண்டு இறுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.